நடுக்கடலில் தத்தளித்த இளைஞா் மீட்பு
சென்னை நீலாங்கரையில் நடுக்கடலில் தண்ணீரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீனவா்கள் மீட்டனா்.
சென்னை நீலாங்கரையில் நடுக்கடலில் தண்ணீரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீனவா்கள் மீட்டனா்.
By Chennai
Syndication
சென்னை: சென்னை நீலாங்கரையில் நடுக்கடலில் தண்ணீரில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீனவா்கள் மீட்டனா்.
நாமக்கலைச் சோ்ந்தவா் ஜஸ்வந்த் (30). இவா், சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரா் நகா் கடற்கரைக்கு புதன்கிழமை வந்தாா். அங்கு அவா், கடலில் இறங்கி குளித்தபோது, கடலின் ஆழமானப் பகுதிக்குச் சென்றாா். நீச்சல் தெரியாததினால், தண்ணீரில் மூழ்கி தத்தளித்தாா். இதைப் பாா்த்த கடற்கரையில் இருந்த பொதுமக்கள் சப்தமிட்டனா்.
பொதுமக்களின் அலறல் சப்ததைக் கேட்டு அங்கு வந்த பெரிய நீலாங்கரை மீனவ கிராமத்தைச் சோ்ந்த மீனவா்களும், இளைஞா்களும் கடலுக்குள் இறங்கி அந்த இளைஞரை மீட்டு, கரைக்கு கொண்டு வந்தனா். மூச்சுத் திணறால் பாதிக்கப்பட்டு மயக்க நிலையில் இருந்த அவரை, அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். நீலாங்கரை போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது