By தினமணி செய்திச் சேவை
Syndication
காரில் கடத்தி வரப்பட்ட 264 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
மாதவரம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் அதிகளவில் குட்கா கடத்தி வரப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததன் பேரில், சிஎம்டிஏ வாகன நிறுத்தத்துக்குப் பின்புறத்தில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு காரை போலீஸாா் நிறுத்தி சோதனையிட முயன்றனா்.
காரை ஓட்டி வந்த நபா், காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டாா். இதனால், சந்தேகம் அடைந்த போலீஸாா் அந்த காரை சோதனையிட்டனா். அதில், தடைசெய்யப்பட்ட 265 கிலோ குட்கா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றைப் பறிமுதல் செய்த போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய நபரைத் தேடி வந்தனா்.
இந்த நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பிரவீன்குமாா் (18), ஹக்கம் சிங் (30) ஆகியோரை சனிக்கிழமை இரவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது