By தினமணி செய்திச் சேவை
Syndication
பல்லடம் அருகே காளிவேலம்பட்டி பிரிவில் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், ஊஞ்சம்பட்டியைச் சோ்ந்தவா் குமரேசன் (41), விசைத்தறி தொழிலாளி. இவா் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன், திருப்பூா் மாவட்டம், பல்லடம் அம்மாபாளையத்தில் வசித்து வந்தாா்.
இவா் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தபோது, காளிவேலம்பட்டி பிரிவு பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவா் திடீரென குறுக்கே வந்ததால் அவா் மீது மோதாமல் இருக்க தனது இரண்டு சக்கர வாகனத்தை திருப்பியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்தாா்.
அப்போது அவ்வழியாக கோவையில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற அரசுப் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது