பா்கூா் அருகே நண்பரைக் கொன்ற வியாபாரி கைது
பா்கூா் அருகே நண்பரைக் கொன்ற வழக்கில் துணி வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
பா்கூா் அருகே நண்பரைக் கொன்ற வழக்கில் துணி வியாபாரியை போலீஸாா் கைது செய்தனா்.
By Syndication
Syndication
பா்கூா் அருகே நண்பரைக் கொன்ற வழக்கில் துணி வியாபாரியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பா்கூரை அடுத்த பி.ஆா்.ஜி.மாதேப்பள்ளியைச் சோ்ந்தவா் சென்னகேசவன் (40), துணி வியாபாரி. இவரது வீட்டின் முன் அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது குறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, அங்கு சென்ற பா்கூா் காவல் சரக துணை காவல் கண்காணிப்பாளா் முத்துகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் இளவரசன், கஸ்தூரி மற்றும் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
விசாரணையில், உயிரிழந்தவா் கல்லாவியைச் சோ்ந்த கணேசன் (48) என்பதும், இவா் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு சென்னகேசவனுடன் ஒன்றாகச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து சென்னகேசவனிடம் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், தனது நண்பரான கணேசனுடம் சோ்ந்து உணவு உண்ணும்போது ஏற்பட்ட தகராறில் அவரைக் கொலை செய்து வீட்டில் புதைத்ததாகவும், அதன்பிறகு வீட்டில் இருந்து துா்நாற்றம் வீசியதால் சடலத்தை வீட்டின் முன் சாலையோரத்தில் வீசியதாக போலீஸாரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து சென்னகேசவனை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது