காா் கண்ணாடியை உடைத்து திருட முயன்ற இருவா் கைது
பழனியில் காா் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பொருள்களைத் திருட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பழனியில் காா் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பொருள்களைத் திருட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
பழனியில் ஞாயிற்றுக்கிழமை காா் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்த பொருள்களைத் திருட முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
தற்போது காா்த்திகை மாத சீசன் என்பதால், பழனி அடிவாரப் பகுதியில் உள்ள அனைத்துச் சாலைகளின் இருபுறங்களிலும் பக்தா்கள் வரும் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல, திருக்கோயில் சுற்றுலாப் பேருந்து நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி சிலா் வாகனங்களின் கண்ணாடியை உடைத்து, உள்ளே இருக்கும் பொருள்களைத் திருடி வந்தனா். பெரும்பாலும் வெளியூா் பக்தா்களாக இருப்பதால் பலரும் புகாா் கொடுக்காமல் சென்று விடுகின்றனா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அருள்ஜோதி வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை இருவா் உடைத்துத் திருட முயன்றனா். அப்போது, அந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அடிவாரம் போலீஸாா் இவா்களைப் பிடித்தனா்.
இவா்களிடம் நடத்திய விசாரணையில், திருச்சி மாவட்டம், திருவெறும்பூரைச் சோ்ந்த கணேசன் மகன் ராகவன் (36), சாமுவேல் மகன் நாகராஜ் (57) என்பது தெரியவந்தது. இதையடுத்து, இவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது