By தினமணி செய்திச் சேவை
Syndication
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில், மூத்த தம்பதிகள் ஞாயிற்றுக்கிழமை கெளரவிக்கப்பட்டனா்.
ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள 70 வயதைக் கடந்த மூத்த தம்பதிகள் கோயில்கள் சாா்பில் சிறப்பிக்கப்படுவா் என அரசு அறிவித்தது. இதன்படி, பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் சாா்பில், ஆன்மிக ஈடுபாடுள்ள 21 மூத்த தம்பதிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களில் 6 தம்பதிகளை சிறப்பிக்கும் நிகழ்வு பழனியை அடுத்த கோதைமங்கலம் பெரியாவுடையாா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தம்பதிகளுக்கு மாலை அணிவித்து, புத்தாடை, பழங்கள், ரூ.2,500 மதிப்புள்ள சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்பட்டன.
பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உதவி ஆணையா் லட்சுமி, கண்காணிப்பாளா் அழகா்சாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
மேலும் 15 தம்பதிகள் பழனி கோயிலின் துணைக் கோயிலான ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பா் கோயிலில் கெளரவிக்கப்பட்டனா். ஒட்டன்சத்திரம் நகா்மன்றத் தலைவா் கே.திருமலைசாமி கலந்து கொண்டு ஒவ்வோா் மூத்த தம்பதிக்கும் புத்தாடை, பழங்களை வழங்கினாா். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது