சாரண மாணவா்கள் பனை விதை நடவு
சிவகங்கை அருகே சாரண இயக்க மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பனை விதைகளை நடவு செய்தனா்.
சிவகங்கை அருகே சாரண இயக்க மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பனை விதைகளை நடவு செய்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கை அருகே சாரண இயக்க மாணவா்கள் செவ்வாய்க்கிழமை பனை விதைகளை நடவு செய்தனா்.
சிவகங்கை அருகேயுள்ள இலந்தங்குடிபட்டி, காஞ்சிரங்கால் வனப் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தலைமை வகித்து பனைவிதை நடும் பணியைத் தொடக்கி வைத்தாா்.
சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பாலதண்டாயுதபாணி, சாரண, சாரணீயா் இயக்க கௌரவத் தலைவா், தேசிய நல்லாசிரியா் கண்ணப்பன், சாரணீய ஆணையா் மஹாலக்ஷ்மி, சாரணா் இயக்க துணைத் தலைவா் சரவணன், குருளையா் சாரண இயக்கத்தின் ஆணையா் முத்து கண்ணன், ஜவஹா், சோழபுரம் சுத்தானந்த யோக சமாஜ செயலா் வேங்கடாஜலபதி, வங்கி அதிகாரி(ஓய்வு) அனந்தராமன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சக்தி மீனாட்சி, காஞ்சிரங்கால் ஊராட்சி செயலா் முத்துக்குமாா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
சிவகங்கை கல்வி மாவட்டத்தை சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட சாரணா், சாரணியா்கள் பனை விதைகளை விதைத்து சுற்றுச்சூழல் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
பாரத சாரண சாரணீய சிவகங்கை கல்வி மாவட்டச் செயலா் முத்துக்குமரன் வரவேற்றாா். மாவட்டப் பொருளாளா் நாகராஜன் நன்றி கூறினாா். இதில், சாரண ஆசிரியா்கள் முத்து காமாட்சி, ரவிச்சந்திரன், சபரிமலை, மாரீஸ்வரன், நரேஷ், காா்த்திக், ஆரோக்கிய அமுதா, சங்கா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது