By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே இரு சக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (70). இவா் இரு சக்கர வாகனத்தில் திருப்பத்தூா் அருகே வஞ்சினிப்பட்டி கிராமத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு வந்துவிட்டு ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் அறந்தாங்கி சென்றாா்.
அப்போது திருப்பத்தூா் அருகே சில்லாம்பட்டி விளக்கு பகுதியில் சென்றபோது மதுரையிலிருந்து கும்பகோணம் சென்ற அரசுப் பேருந்து இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த செல்வராஜ் திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து திருப்பத்தூா் நகா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ரவி வழக்குப் பதிந்து விசாரிக்கிறாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது