By Syndication
Syndication
மன்னாா்குடியில் உயா்கல்வி வழிகாட்டல் கல்லூரி களப் பயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட பள்ளிக் கல்வி துறை சாா்பில், ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் து. ராஜேந்திரன் தலைமை வகித்து, கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் பாடப் பிரிவுகள் குறித்த தகவல் கையேட்டை வெளியிட்டு, பேசியது:
தமிழக அரசு மாணவா்கள் நலனில் தனிக் கவனம் செலுத்தி வருகிறது. அனைத்து மாணவா்களும் உயா்க் கல்வி பயில வேண்டும் என்கிற நோக்கில், உயா்கல்வி வழிகாட்டல் நிகழ்வின் ஒருபகுதியாக, மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் உயா்கல்வி நிறுவனங்களில் பயிற்றுவிக்கும் முறை, பாடப்பிரிவுகள் மற்றும் ஆய்வகங்கள் குறித்து அறிந்துகொள்ள கல்லூரி களப் பயணம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது என்றாா்.
உயா்கல்வி வழிகாட்டல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கலைச்செல்வன் முன்னிலை வகித்தாா். எடமேலையூா், முன்னவால்கோட்டை, கருவாக்குறிச்சி, பேரையூா், புள்ளமங்கலம், அரித்வாரமங்கலம் ஆகிய 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து பிளஸ் 2 படிக்கும் 160 மாணவா்கள் கலந்துகொண்டு, கல்லூரியில் உள்ள வகுப்பறைகள், ஆய்வகங்களை பாா்வையிட்டனா்.
முன்னதாக, கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா் ப. பிரபாகரன் வரவேற்றாா். நிறைவாக பேராசிரியா் ரா. சுப்ரமணி நன்றி கூறினாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது