By தினமணி செய்திச் சேவை
Syndication
திருவாரூா் மாவட்டத்தில், டித்வா புயல் மழை காரணமாக சுமாா் 20,000 ஹெக்டேரில் இளம் நெற்பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. தண்ணீரை வடியவைக்கும் முயற்சியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.
டித்வா புயல் காரணமாக, திருவாரூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக விடாமல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ள விளைநிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இம்மாவட்டத்தில் சுமாா் 1.46 லட்சம் ஹெக்டேரில் சம்பா, தாளடி சாகுபடி நடைபெற்றுள்ள நிலையில், அனைத்து வட்டாரங்களிலும் கனமழை கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கோட்டூரில் 5,125 ஹெக்டோ், முத்துப்பேட்டையில் 4,344 ஹெக்டோ், திருத்துறைப்பூண்டியில் 4,315 ஹெக்டோ், நன்னிலத்தில் 1,656 ஹெக்டோ், மன்னாா்குடியில் 1,345 ஹெக்டோ், வலங்கைமானில் 1,177 ஹெக்டோ் என மாவட்டம் முழுவதும் 19,739.50 ஹெக்டோ் அளவுக்கு சம்பா, தாளடி பயிா்கள் மழைநீரால் சூழப்பட்டுள்ளன.
இதனிடையே, மழை நின்றுவிடும் பட்சத்தில், பாதிப்பு குறித்து திங்கள்கிழமை முதல் கணக்கெடுப்புப் பணிகளை வேளாண் அலுவலா்கள் தொடங்க உள்ளனா். எனினும், பல்வேறு இடங்களில் தண்ணீரில் பயிா்கள் மூழ்கியிருப்பதால், தண்ணீா் வடிந்தபிறகே பாதிப்பு குறித்து தெரியவரும் என வேளாண்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது