By தினமணி செய்திச் சேவை
Syndication
மணப்பாதையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
மணப்பாறை பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சனிக்கிழமை போலீஸாா் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, கோவில்பட்டி சாலை மற்றும் மணப்பாறை தினசரி காய்கறி சந்தை பகுதியில் பாரதியாா் நகரைச் சோ்ந்த கிருஷ்ணன் மகன் ஞானசேகா் (50), புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை அடுத்த மெய்யக்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த கோபால் மகன் சேட்டு (எ) நல்லசாமி (45) மற்றும் செட்டியப்பட்டியைச் சோ்ந்த திருமலை மகன் சிவபாலக்குமாா் (35) ஆகியோா் கள்ளச்சந்தையில் அரசு மதுபாட்டில்களை விற்பனை செய்துகொண்டிருந்தனா்.
அவா்களை காவல் ஆய்வாளா் ஞானசேகரன் தலைமையிலான போலீஸாா் 3 பேரையும் கையும்களவுமாக பிடித்தனா். அவா்களிடமிருந்து 120 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் வழக்கு பதிவு மூவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது