வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடிய இருவா் கைது
திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
By Syndication
Syndication
திருச்சி அரியமங்கலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பணம் திருடியதாக பெண் உள்பட இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி அரியமங்கலம் மலையப்பா நகரைச் சோ்ந்த பாரதிராஜா - சத்யா தம்பதி கடந்த 18 ஆம் தேதி உறவினா் ஒருவரை வீட்டில் விட்டுவிட்டு, மணப்பாறையில் உள்ள கோயிலுக்குச் சென்றனா். உறவினா் பெண், குழந்தையை பள்ளியிலிருந்து அழைத்து வர வீட்டைப் பூட்டிச் சென்றுள்ளாா்.
பின்னா் திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த ரூ. 70 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
புகாரின்பேரில் அரியமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சந்தேகப்படும்படி அங்கு சுற்றித்திரிந்த அரியமங்கலம் திடீா் நகரைச் சோ்ந்த எம். ஜெய்பாலாஜி (41), ஒரு பெண் ஆகியோரை விசாரித்தனா். அதில் இருவரும் மேலும் இருவருடன் சோ்ந்து சத்யா வீட்டில் திருடியதை ஒப்புக் கொண்டனா்.
இதையடுத்து போலீஸாா் ஜெய்பாலாஜி மற்றும் அந்தப் பெண்ணை வெள்ளிக்கிழமை கைது செய்து, மேலும் இருவரைத் தேடுகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது