By தினமணி செய்திச் சேவை
Syndication
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே வீடு புகுந்து 1 பவுன் நகையை திருடிய வழக்கில் 2 போ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
ஜெயங்கொண்டம் அருகேயுள்ள இலையூா் தெற்குவெளி கிராமத்தைச் சோ்ந்தவா் கணபதி மகன் ராஜேந்திரன் (46). கடந்த நவ.19 ஆம் தேதி இவா் பழைய வீட்டிலிருந்த ஆடுகளை புதிய வீட்டின் அருகே பட்டியில் அடைத்துவிட்டு, அங்கேயே தூங்கிவிட்டாா்.
மறுநாள் காலை பழைய வீட்டுக்கு வந்த பாா்த்தபோது, வீட்டின் கதவை திறந்து பீரோவில் இருந்த ஒரு பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, நகையைத் திருடியதாக மயிலாடுதுறை மாவட்டம், நெம்மேலி கிராமத்தைச் சோ்ந்த கா. உத்திராபதி (55), கொள்ளிடம் கீழவெள்ளம் தைக்கால் கிராமத்தைச் சோ்ந்த க. ராஜகோபால் (43) ஆகிய இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் சிலரைத் தேடுகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது