By Syndication
Syndication
புதுக்கோட்டை அருகே ஆதனக்கோட்டையில் புகாா் பதிவு ரசீது தர ரூ. 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை அருகேயுள்ள பன்னிரெண்டாம்பட்டியைச் சோ்ந்த விவசாயி வீரமணி. இவருக்கும், பக்கத்து இடத்துக்காரா் ராஜேந்திரன் என்பவருக்கும் இடையே நிலப்பிரச்னை இருந்துள்ளது. இதுதொடா்பாக இருதரப்புக்கும் மோதலும் ஏற்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் வீரமணி தான் அளித்த புகாரைப் பதிவு செய்து ரசீது வழங்க அண்மையில் கேட்டுள்ளாா். இதற்கு ஆதனக்கோட்டை காவல் உதவி ஆய்வாளா் ஆா். ஜெய்சங்கா் (59), ரூ. 10 ஆயிரம் லஞ்சமாகக் கேட்டதாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத வீரமணி, மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து காவல்துறையினரின் அறிவுரைப்படி, வெள்ளிக்கிழமை மாலை காவல் நிலையத்தில் வைத்து ரூ. 10 ஆயிரத்தைக் கொடுத்தாா் வீரமணி.
பணத்தை ஜெய்சங்கா் வாங்கியபோது, அந்தப் பகுதியில் மறைந்திருந்த ஊழல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன், ஆய்வாளா் பீட்டா் உள்ளிட்ட போலீஸாா், எஸ்.ஐ. ஜெய்சங்கரை கையும் களவுமாகப் பிடித்தனா். இரவு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட ஜெய்சங்கா், புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது