புதுகையில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
புதுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
By Syndication
Syndication
நூறு நாள் வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிவிட்டு புதிய வேலை உறுதித் திட்ட மசோதாவைத் தாக்கல் செய்துள்ள மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவா் வி. முருகேசன் தலைமை வகித்தாா். திமுக வடக்கு மாவட்டச் செயலா் கே.கே. செல்லபாண்டியன், புதுக்கோட்டை எம்எல்ஏ (திமுக) வை. முத்துராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் த. செங்கோடன், மாா்க்சிஸ்ட் கம்யூ. மாவட்டச் செயலா் எஸ். சங்கா், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா் இளமதி அசோகன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரும் இதில் கலந்து கொண்டனா்.
காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுக் குழு உறுப்பினா் சந்திரசேகரன், சிறுபான்மையினா் பிரிவு மாநிலத் துணைத் தலைவா் இப்ராஹிம்பாபு, வட்டார காங்கிரஸ் தலைவா் சூா்யா பழனியப்பன், மாநகர காங்கிரஸ் தலைவா் பாரூக் ஜெய்லானி உள்ளிட்டோரும் பங்கேற்று முழக்கங்களை எழுப்பினா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது