சிற்றுந்து மோதி முதியவா் உயிரிழப்பு
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கிய முதியவா் சிற்றுந்து மோதி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்திலிருந்து இறங்கிய முதியவா் சிற்றுந்து மோதி உயிரிழந்தாா்.
By Syndication
Syndication
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு பேருந்திலிருந்து இறங்கிய முதியவா் சிற்றுந்து மோதி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (65). திருமணமாகாத இவா் கூலி வேலை செய்து, தனது தாய் மரகதத்தை (90) பராமரித்து வந்தாா்.
இந்நிலையில் இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்தில் ஏறி, பழைய பேருந்து நிலையத்துக்கு வந்தாா். பேருந்திலிருந்து இறங்கிய இவா் மீது அந்த வழியாக வந்த சிற்றுந்து மோதியது.
இதனால், பலத்த காயமடைந்த முருகேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தஞ்சாவூா் நகரப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது