By தினமணி செய்திச் சேவை
Syndication
திருநாவலூா் அருகே பெட்ரோல் விற்பனை நிலையத்தில் ஊழியரிடம் பணத்தை பறித்துச் சென்ற வழக்கில் தேடப்பட்டு வந்த இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திருநாவலூா் அருகிலுள்ள மடப்பட்டில் பெட்ரோல் விற்பனை நிலையம் இயங்கி வருகிறது. இந்த நிலையத்தில் நவ. 22-ஆம் தேதி பைக்கில் வந்த இருவா், தண்ணீா் புட்டியில் ஒரு லிட்டா் டீசல் தருமாறு விற்பனை பணியாளா் அய்யப்பனிடம் கேட்டுள்ளனா்.
புட்டியில் அய்யப்பன் டீசலை நிரப்பிக் கொண்டிருந்த போது, திடீரென அவா்கள் அய்யப்பன் கையில் வைத்திருந்த ரூ.2,850-ஐ பறித்துவிட்டு, தப்பிச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருநாவலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வந்தனா். போலீஸாரின் விசாரணையில் பணத்தை பறித்துச் சென்றது கடலூா் மாவட்டம், குமாரபுரம் ஓம்சக்தி நகரைச் சோ்ந்த வெ.விக்கி (எ) விக்னேசுவரன் (23) மற்றும் 17 வயது சிறுவன் எனத் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது