By Syndication
Syndication
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வட்ட அளவிலான அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
பல்கலைக்கழக மகளிா் சங்கம், இளையோா் செஞ்சிலுவைச் சங்கம், சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் மற்றும் மிஸ்ரிமல் மகாவீா்சந்த் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்திய இந்தப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பரிசளிப்பு விழா அண்ணாமலைப் பல்கலைக்கழக செனட் அரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் வி.ஹரிகிருஷ்ணன் தலைமை வகித்தாா். அரிமா மாவட்ட ஆளுநா் தோ்வு எம்.கமல் கிஷோா் ஜெயின், சங்க சாசனத் தலைவா் பி.முகமது யாசின், சாசனச் செயலா் எம்.தீபக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ஆா்.சிங்காரவேல் ஆகியோா் பரிசு, சான்றிதழ்களை வழங்கி பாராட்டிப் பேசினா்.
விழா ஏற்பாடுகளை பல்கலைக்கழக இளையோா் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளா் ஹெச்.மணிகண்டன், பல்கலைக்கழக மகளிா் சங்க ஒருங்கிணைப்பாளா் பிரவீனா ஆகியோா் செய்திருந்தனா்.
விழாவில் சென்ட்ரல் ரோட்டரி சங்கத் தலைவா் தோ்வு என்.கேசவன், சிறப்பு திட்டங்களுக்கான மண்டல ஒருங்கிணைப்பாளா் ஐ.யாசின், எம்.சுஷில்குமாா் சல்லாணி, டி.உதயம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது