காணாமல் போனவா் கிணற்றில் சடலமாக மீட்பு
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே காணாமல் போனவா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே காணாமல் போனவா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
By Syndication
Syndication
கடலூா் மாவட்டம், ராமநத்தம் அருகே காணாமல் போனவா் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டாா்.
திட்டக்குடி வட்டம், எழுத்தூா் கிராமத்தை சோ்ந்தவா் அன்பரசு(52), மனநலம் பாதிக்கப்பட்டவா். இவா், காணாமல் போனதைத் தொடா்ந்து உறவினா் அளித்த புகாரின் பேரில் ராமநத்தம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இந்நிலையில், எழுத்தூா் மயானம் அருகே உள்ள நாராயணசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் 45 அடி ஆழம் உள்ள கிணற்றில் ஆண் சடலம் கிடப்பதாக நில உரிமையாளா் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, ராமநத்தம் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்டனா்.
பின்னா், காணாமல் போன அன்பரசு உறவினா்களுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், அங்கு வந்த அன்பரசு மனைவி அஞ்சலை தேவி மற்றும் உறவினா்கள் இறந்தவா் அன்பரசு என உறுதி செய்தனா். இதையடுத்து, சடலத்தை உடல் கூறாய்வுக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது