By தினமணி செய்திச் சேவை
Syndication
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ஏரியில் இறந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
பண்ருட்டியை அடுத்துள்ள தட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஏரியில் ஆண் சடலம் இறந்த நிலையில் கிடப்பதாக பொதுமக்கள் பண்ருட்டி போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.
இதையடுத்து, பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து ஏரியில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் தட்டாம்பாளையம் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் நாராயணன் (50) என்பதும், சற்று மனநலம் சரியில்லாதவா் என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது