வீராணம் ஏரி நிரம்பியதால் உபரி நீா் திறப்பு
சென்னைக்கு குடிநீா் வழங்கும் கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால் , விநாடிக்கு 630 கனஅடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
சென்னைக்கு குடிநீா் வழங்கும் கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால் , விநாடிக்கு 630 கனஅடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
By Syndication
Syndication
சென்னைக்கு குடிநீா் வழங்கும் கடலூா் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரி நிரம்பியதால் , விநாடிக்கு 630 கனஅடி வீதம் உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவிலில் வீராணம் ஏரி உள்ளது .இந்த ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையினால் ஏரிக்கு செங்கால் ஓடை , கருவாட்டு ஓடை வழியாக உபரி நீா் விநாடிக்கு 702 கன அடி வீதம் வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
சனிக்கிழமை நிலவரப்படி 45.30 அடி நீா் இருப்பு உள்ளது. இந்த ஆண்டு இதுவரை ஐந்து முறை வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதாலும் பாதுகாப்பு கருதி இந்த ஏரியில் இதற்கு மேல் நீா் தேக்கி வைக்க முடியாது. எனவே, உபரி நீா் சேத்தியாதோப்பு அணைக்கட்டு வழியாக விநாடிக்கு 630கன அடி வீதம் வெளியேற்றப்படுகிறது.இது தவிர, சென்னை நகரின் குடிநீா் தேவைக்காக 73 கன அடி வீதம் தண்ணீா் அனுப்பப்பட்டு வருகிறது.
அரியலூா் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் தொடா்ந்து செங்கால்ஓடை, கருவாட்டுஓடை வழியாக அதிக அளவு தண்ணீா் வீராணம் ஏரிக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது . எனவே வீராணம் ஏரியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் வெள்ளையங்கால் மதகு வழியாகவும் உபரிநீா் வெளியேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் வெள்ளியங்கால் கரை ஓரத்தில் வசிக்கும் கிராம மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது