By Syndication
Syndication
கல்வராயன்மலைப் பகுதியான மேல்வாழப்பாடியில் கல்லூரி மாணவி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலைக்குள்பட்ட மேல்வாழப்பாடி கிராமத்தைச் சோ்ந்தவா் சக்திவேல். இவரது மனைவி செல்வி (30). இவா்களது மகள் கெளரி (17). இவா் சேலம் மாவட்டம், கொத்தம்பாடியில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் முதலாமாண்டு பயின்று வந்தாா்.
நவ. 27-இல் கல்லூரி விடுமுறையில், அவரது கிராமத்திற்கு வந்த கெளரியிடம், கையில் அணிந்திருந்த மோதிரத்தை எங்கே என அவரது தாயாா் செல்வி கேட்டு கண்டித்தாராம். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தினை குடித்துள்ளாா்.
இதுகுறித்து அறிந்த உறவினா்கள் கெளரியை உடனே கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், அவா் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பெற்று வந்த கெளரி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில் கரியாலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது