ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு... ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம்!
ஆபரேஷன் சிந்தூர் நடந்து 6 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தரப்பில் தகவல்...
ஆபரேஷன் சிந்தூர் நடந்து 6 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தரப்பில் தகவல்...
By இணையதளச் செய்திப் பிரிவு
Manivannan.S
ஆபரேஷன் சிந்தூர் நடந்து 6 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக புலனாய்வு அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ராணுவம் பதில் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் நடந்து 6 மாதங்களான நிலையில், ஜம்மு - காஷ்மீரில் மீண்டும் தாக்குதல் நடத்த லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்புகள் தகவல் தெரிவிக்கின்றன.
செப்டம்பர் மாதம் முதலே ஜம்மு - காஷ்மீருக்குள் உளவு பார்ப்பதற்காக பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஊடுருவியுள்ளதாகவும், பாகிஸ்தானின் சிறப்பு சேவைக் குழு மற்றும் ஐஎஸ்ஐ அமைப்புகள் மூலம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு வழியாக ஆயுதங்களையும் கொண்டு சேர்த்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதியான ஷாம்ஷெர் தலைமையிலான குழு, ட்ரோன்களைப் பயன்படுத்தி உளவு பார்த்ததாகவும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஊடுருவல் நடத்த சந்தேகத்திற்கிடமான இடைவெளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் உளவு வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.
இதையும் படிக்க | அரசியல் அனுபவமில்லை, இருந்தாலும்... பிகாரின் இளம் வயது வேட்பாளரின் வாக்குறுதிகள்!
6 Months After Op Sindoor, Lashkar And Jaish's New J&K Attack Plan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது