சருமத்தில் தேவையற்ற முடி உள்ளதா? இயற்கையான தீர்வு இதோ!
பெண்களுக்கான சருமப் பராமரிப்பு பற்றி...
பெண்களுக்கான சருமப் பராமரிப்பு பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Muthumari.M
சமீபமாக பெண்கள் அழகுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் சிலருக்கு முகத்தில், கை, கால்களில் தேவையற்ற முடிகள் வளர்ந்திருக்கும். இது பெரும்பாலானோருக்கு அழகைக் கெடுக்கும் விதத்தில் இருக்கும்.
இது பெண்களுக்கு ஒரு சில ஹார்மோன் மாற்றங்களாலும் ஏற்படும் என்று கூறப்படுகிறது. வழக்கத்திற்கு அதிகமான முடி வளர்ச்சி இருந்தால் கண்டிப்பாக ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
மாறாக சாதாரணமாக முகத்தில் குறிப்பாக உதட்டின் மேல் பகுதியில், தாடையின் கீழ் பகுதியில் நெற்றியில்கூட சிலருக்கு உரோமங்கள் இருக்கும். அதேபோல கை, கால்களிலும் அதிகமாக முடி வளர்ந்திருக்கும். பலரும் இதற்கு க்ரீம்களைத் தொடர்ந்து பயன்படுத்துகின்றனர்.
இதற்கு இயற்கையான வழிகள் இருக்கின்றன.
கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள், அரிசி மாவு தலா ஒரு தேக்கரண்டி எடுத்து அத்துடன் தேவையான அளவு பால் சேர்த்து கலந்து முகத்தில் முடி உள்ள இடங்களில் தடவி ஒரு 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிட வேண்டும்.
சிலருக்கு பால் ஒவ்வாமை இருக்கும். அவர்கள் பாலுக்கு பதிலாக தயிர் சேர்த்த கலவையை முயற்சிக்கலாம்.
வாரத்திற்கு குறைந்தது 3 நாள்கள் இவ்வாறு செய்யலாம். தொடர்ந்து செய்துவர படிப்படியாக முடி உதிரும்.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]
Do you have unwanted hair on your skin? Here's a natural solution!
இதையும் படிக்க | உப்பு மட்டும் போதாது! ரத்த அழுத்தம், மனச்சோர்வைக் குறைக்கும் பொருள் எது தெரியுமா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது