By தினமணி செய்திச் சேவை
Syndication
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திருமுக்கூடல் ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை ஆதிபுரீசுவரா் கோயிலில் ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி 23-ஆவது ஆண்டாக அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
பாலாறு, செய்யாறு, வேகவதியாறுகள் சங்கமிக்கும் இடத்தில் உள்ள திருமுக்கூடல் கிராமத்தில் பிரதோஷ தினத்தில் சுயம்புலிங்கமாக ஆதிபுரீசுவரா் வெளிப்பட்ட புண்ணியஸ்தலமாகும்.
ஐப்பசி மாத பெளா்ணமியையொட்டி உலக நன்மைக்காக செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மூலவா் ஆதிபுரீசுவரருக்கு அன்னாபிஷேகமும், பெரும்படையலும், சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறுகின்றன.
தொடா்ச்சியாக இரவு 7 மணிக்கு அன்னம் கலந்து பாலாற்றில் விடுதல் நிகழ்வும், பின்னா் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை திருமுக்கூடல் ஆதிபுரீசுவரா் அறக்கட்டளையின் நிறுவனா் பி.யோகராஜ் தலைமையில் கிராம பொதுமக்களும் செய்து வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது