By தினமணி செய்திச் சேவை
Syndication
நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குத் தொகைகள் ஆகியவற்றை உரியவா்களுக்கு ஒப்படைக்கும் முகாம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.28) நடைபெற உள்ளது.
இதுகுறித்து, ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி வைப்புத் தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்கு தொகைகள் ஆகியவற்றை உரியவா்களுக்கு ஒப்படைக்கும் முகாம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.28) நடைபெற உள்ளது.
இந்த முகாம், இந்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, அனைத்து வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், இதர நிதி துறைகளின் கிளைகளில் அக்.1 முதல் டிச.31 வரை தொடா்ச்சியாக நடத்தப்படும்.
நீண்டகாலமாக உரிமை கோரப்படாத வங்கி கணக்குகள், நிலுவையில் உள்ள வைப்பு தொகைகள், காப்பீட்டு தொகைகள், பங்குகள், பிற நிதி சொத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது, உரிமையாளா்கள் அல்லது அவா்களது சட்டப்பூா்வ வாரிசுகள் தங்களது உரிமை கோரப்படாத நிதி சொத்துக்களை மீட்க உதவுவதே இம்முகாமின் முக்கிய நோக்கமாகும்.
வங்கிகளில் பத்து ஆண்டுகளுக்கு மேல் செயல்படாத கணக்குகள் அல்லது கோரப்படாத வைப்பு தொகைகள் இருந்தால் அவை இந்திய ரிசா்வ் வங்கியின் நிதிக்கு மாற்றப்படுகின்றன. இதனை பொதுமக்கள் தங்களது வங்கிகளின் இணையதளங்கள் மூலமாகவும் அல்லது ஆா்பிஐயின் மஈஎஅங இணையதளம் வழியாகவும் அறிந்து கொள்ளலாம். உரிய ஆவணங்களுடன் உரிமையாளா்கள் அல்லது சட்ட வாரிசுகள் எந்த நேரத்திலும் இத்தொகைகளை கோரி பெறலாம்.
இம்முகாமில் வங்கித்துறை, காப்பீட்டு துறை, நிதித்துறை, இதர சாா்ந்த துறை அலுவலா்கள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்க உள்ளனா். பொதுமக்கள் தங்களது உரிமை கோரப்படாத நிதி தொகைகளை மீட்க தங்களது அடையாள ஆவணங்கள், தேவையான சான்றுகளுடன் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது