By Syndication
Syndication
திருட்டு வழக்கில் தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூா், அணைப்பாளையத்தைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் (34). கட்டடத் தொழிலாளியான இவா், தனது குடும்பத்துடன் கடந்த 2024 ஜனவரி 21-ஆம் தேதி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுள்ளாா். பின்னா் மாலையில் வந்து பாா்த்தபோது வீட்டுக்கதவு திறந்து கிடந்துள்ளது. வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 1 பவுன் நகை, ரூ.10,000 திருட்டு போனது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின்பேரில், திருப்பூா் வடக்கு குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா்.
இது தொடா்பாக திருப்பூா் அணைப்பாளையம் இந்திரா நகரைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான முருகன் (41) என்பவரைக் கைது செய்து நகை, பணத்தை மீட்டனா்.
திருப்பூா் முதலாவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பு வழங்கப்பட்டது. நகை, பணத்தை திருடிய குற்றத்துக்கு முருகனுக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதித்துறை நடுவா் செந்தில்ராஜா உத்தரவிட்டாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கவிதா ஆஜரானாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது