கேரள உள்ளாட்சித் தேர்தல்: சசி தரூர் வாக்களித்தார்!
கேரள உள்ளாட்சித் தேர்தல் பற்றி...
கேரள உள்ளாட்சித் தேர்தல் பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Muthumari.M
கேரள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
கேரளத்தில் இன்று(டிச. 9) உள்ளாட்சித் தேர்தல் காலை 7 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, ஆலப்புழா, எர்ணாகுளம் ஆகிய 7 மாவட்டங்களில் உள்ள பஞ்சாயத்துகளுக்கு இன்று உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி 14.5% வாக்குகள் பதிவாகியுள்ளன.
காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் வழுதக்காடு பகுதியில் உள்ள காட்டன் ஹில் பள்ளியில் தனது வாக்கினைச் செலுத்தினார்.
இதன்பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
'திருவனந்தபுரம் கேரளத்தின் தலைநகரம், கடந்த 45 ஆண்டுகளாக தவறான நிர்வாகத்தால் நாம் அவதிப்பட்டு வருகிறோம். மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்று நாங்கள் நம்புகிறோம். ஐக்கிய ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் கட்சி இளம் வேட்பாளர்களை முன்னிறுத்தியுள்ளன. ஏனெனில் இங்கு மாற்றம் தேவை. மாற்றம் வர வேண்டும் என்பதற்காக நான் வாக்களிக்க வந்துள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வருகிற டிச. 11 ஆம் தேதி மீதியுள்ள திருச்சூர், மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மொத்தமுள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்கு எண்ணிக்கை டிச. 13 ஆம் தேதி நடைபெறும்.
கேரளத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Kerala local body elections: Shashi Tharoor casts his vote
இதையும் படிக்க | நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக் கோரி மக்களவையில் திமுக நோட்டீஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது