கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் முன்னிலை! ஆளும் கம்யூ. பெரும் பின்னடைவு!
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரம் பற்றி...
கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளின் தற்போதைய நிலவரம் பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Muthumari.M
கேரள உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஒட்டுமொத்தமாக காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்று வருகிறது.
கேரளத்தில் டிச. 9, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று(டிச. 13) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பிற்பகல் 1 மணி நிலவரப்படி, வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி(எல்டிஎஃப்) கூட்டணி சற்று பின்னடைவைச் சந்தித்து வருகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ் கூட்டணியான யுடிஎஃப் முன்னிலையில் இருந்து வருகிறது.
மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 439 இடங்களிலும் கம்யூனிஸ்ட் கூட்டணி 373 இடங்களிலும் பாஜக கூட்டணி 23 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
152 ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் - 81, எல்டிஎஃப் - 63
14 மாவட்ட பஞ்சாயத்துகளில் யுடிஎஃப் - 8, எல்டிஎஃப் - 6
87 நகராட்சிகளில் யுடிஎஃப் - 55, எல்டிஎஃப் - 28, என்டிஏ - 2
6 மாநகராட்சிகளில் யுடிஎஃப் - 4 எல்டிஎஃப் - 1, என்டிஏ - 1 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.
கேரளத்தில் அடுத்தாண்டு(சில மாதங்களில்) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அதன்படி உள்ளாட்சித் தேர்தலில் பின்னடைவைச் சந்தித்திருப்பது ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Kerala local body election results: UDF shows strong lead in local body poll
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது