ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!
நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது பற்றி...
நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது பற்றி...
By இணையதளச் செய்திப் பிரிவு
Ravivarma.s
ஹிஜாப் விவகாரம்: பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கியது தொடர்பாக பிகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பிகார் தலைமைச் செயலகத்தில் அரசு மருத்துவர்களுக்கு திங்கள்கிழமை பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்வில், பெண் மருத்துவரின் ஹிஜாப்பை முதல்வர் நிதீஷ் குமார் அகற்றியது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
இதுதொடர்பான வெளியான விடியோவில், பெண் மருத்துவரிடம் எதோ கூறும் நிதீஷ், திடீரென்று அவரது அனுமதியின்றி ஹிஜாப்பை இழுத்து விலக்கினார். மேடையில் இருந்தவர்கள் இந்த செயலைக் கண்டு சிரித்த நிலையில், உடனடியாக அப்பெண்ணை மேடையில் இருந்து பெண் காவலர் ஒருவர் கூட்டிச் சென்றார்.
இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்தில் நிதீஷ் குமாருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லக்னெளவில் உள்ள கைசர்பாக் காவல் நிலையத்துக்கு நேரில் சென்ற சமாஜவாதி கட்சியின் மூத்த நிர்வாகி சுமையா ராணா, இந்த புகாரை அளித்தார்.
The incident of removing the hijab: A police complaint has been filed against Nitish Kumar!
இதையும் படிக்க : பெண் மருத்துவரின் ஹிஜாப்பை வலுக்கட்டாயமாக விலக்கிய நிதீஷ் குமார்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது